Saturday 27 July 2013

வாலி நீ என்றும் வாழி !!!!






இனி யாரிடம் கேட்போம்
எடுத்த மொழி
அடுக்கி வரும்
மிடுக்கின் தமிழை. . .?

இனி யாரிடம் பருகுவோம்
தொடையும் சந்தமும்
எதுகையும் மோனையும்
துளிர்த்து வரும்
இன் தமிழ் அதகத்தை. . .?


இனி யாரிடம் பார்ப்போம்
செம்மாந்த நடை 
பொறையாரந்த நிலை
இறையார்ந்த சொல்
அருவி வரும்
என் தமிழ் அருவியை. . .? 

முருகா
இவரின் உயிர்
உன் இணையடி தாமரையில்
இளைப்பாற இறைஞ்சுவதர்க்கு
என் நலம் தடுக்கிறது. . .
இவரை மீள்வித்து
மீண்டும் பிறக்கச்செய்
நின் தமிழை
நிகரில்லாமல் நிகர்க்கச் செய்

வாலி நீ என்றும் வாழி!!!!!

No comments: