Monday 28 March 2011

சிதறல். . .

கடும் குளிர். . .
கூவுகிறது காற்று,
தேகம் எங்கும்
அனலாய் ழுவுகிராய். . .

கண்ணுக்கு புரியாத
கதிர்வீச்சாய்
கலந்து நிற்கிறாய் என்னோடு. . .

காதலே ! நீ யார் என்று தெரியாமல்,
கவி பாடுகிறேன். . .
உன்னைச் சேராமலே,
பிரிந்து தவிக்கிறேன். . .
காட்சிகள் இல்லாத கணவாய். . .
உருவம் இல்லாத நிழலாய். . .
ஆசைகளாய்,
ஏக்கங்களாய்................ஐயோ ! வார்த்தைகளும்
உன்னால் வஞ்சகம் செய்கிறதடி. . .

அத்தனைக்கும்,
ஆறுமுகனை பிராத்திக்கும். . .
எந்தன் உள்ளம். . .
இன்று உனைக் காண,
"உனக்கான" உள்ளம்
உன்னிடம் பிராத்திக்கிறது . . .பாவியடி நீ !
நண்பன் முருகன் நல்லவன்,
நாளை தமிழ் சொன்னால். . .சரி ஆகிவிடுவான். . .