Saturday 24 March 2012

திருப்புறவார்பனங்காட்டூர் - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். . .


நீடல் கோடல் அலரவெண் முல்லை
நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே
-திருஞான சம்பந்தர்
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,

                                வணக்கம், இறைவனின் மாரில்லாத கருணையின் வெளிப்பாட்டால் தங்கள் ஆட்சியில் தமிழகம் வளமையும், அன்பும், ஆனந்தமும் பெருக வேண்டும் என்று எம்பெருமானின் திருவுலத்தை பிராத்திக்கிறேன்.
 மேற்ச்சொன்ன பாடல் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரால் “திருப்புறவார்பனங்காட்டூர் ஸ்ரீ புறவம்மை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீசர் பெருமான் திருவருள் நோக்கி பாடப்பெற்ற தேவாரப் பாடல், நாளும் தில்லையாலும் ஞானமா நடராச மூர்த்தியின் திருவருளை எண்ணி உள்ளம் உருகி விழி செருக வழிபடும் சிவனடியார் பெருமக்கள் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் யாவையும் திரு கைலைக்கு பொருந்தி வழிபடுவார் என்பதை ஆன்மீக ஞான மார்க்க வழிதேடும் நீங்கள் அறியாததொன்றுமில்லை, அப்படி இருக்க தங்கள் மேன்மை மிகுந்த ஆட்சியின் கீழ் உள்ள தமிழகத்தின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற பணயபுறம் (திருப்புறவார்பனங்காட்டூர்) திருப்பனங்காட்டீசர் பெருமான் திருக்கோவிலை நெடுஞ்சாலை அமைக்கும் பொருட்டு, இடித்து அகற்ற போவதான செய்திகேட்டு இதயம் ஒருங்கிய நிலை அடைந்துள்ளோம். அறிவின் மேன்மை பொருந்திய பொறியாளர் பெருமக்கள் தங்கள் அனுபவ மேன்மையால் வேறு ஒரு பாதை கொண்டு சாலை அமைக்க முடியும் ஆனால் எதிர்த்து செய்ய பனி ஒன்று அறிந்திடாத ஏழை நாங்கள், சூது தவிர்த்து சிவநெறி தலைத்து ஓங்கச் செய்த ஞானசம்பந்த மூர்த்தி ஸ்வாமிகள் பாடிய 1000 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஸ்தலத்தை எங்கனம் மீள்கொனர்வோம் ? நெடுஞ்சாலைக்கு மற்றுப் பாதை அமைக்க வழி வகை செய்து அடியார்கள் இதயம் ஆனந்தமுற நீங்கள் நல்லதோர் நடவடிக்கை மேற்கொண்டு அடியார்க்கு அடியானின் திருவருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்று மன்றாடி வேண்டிகொள்கிறோம்.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

என்றும் தங்கள் கீள்படிந்துள்ள
கண்ணப்பன் 





(படங்கள் : http://www.shaivam.org )





Wednesday 21 March 2012

அணு(கு) முறை. . .!



ஆயிரம் தான் சொன்னாலும் தற்போதைய சூழ்நிலையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்தியா போன்ற வளரும் நாட்டில் அணு மின்சாரத்தின் தேவை நிச்சயம் தவிர்க்க இயலாதது. . .! அதே சமயம் அதில் உள்ள ஆபத்தும் மறுக்க முடியாதது, அதில் இருந்து வெளியேறும் கதிரியிக்கம் நிறைந்த நீரினால் மீன் வளம் குறையும் என்ற மீனவ மக்களின் வாதம் இயல்பானதும், அவர்களின் வாழ்வாதார சம்பத்தபட்டதும் கூட. . .!மீன் கிடைத்தால் தானே அவர்கள் அதை குளிர் பதனிடு(cold storage) அறையில் சேமிக்க இயலும் ?

 இப்படி உள்ள சூழ்நிலையில் கூடங்குளத்தில் சாலைகள் போடுவதை போன்ற "இனாம்" அரசியலை தவிர்த்து அதில் வெளியேறும் நீரின் தரத்தை மேம்படுத்தி வெளியேற்றுவதற்கு அனைத்துலக (மறுபடியும் இந்திய அணு விஞ்ஞானிகள் அல்ல...!) சூளியில் வல்லுனர்கள் மற்றும் அறிஞர்களை கொண்டு ஒரு புது நீர் மேம்பாட்டு சுத்திகரிப்பு நிலையத்தையோ அல்லது ஏற்கனவே உள்ளவற்றில் மாறுதல்கள் கொண்டோ வடிவமைக்கலாம். . .! அது மட்டும் அல்லாமல் 20 வருடங்களுக்குள் இந்த அணு மின்நிலையத்தை மூடுவதற்கான உறுதி மொழி  ஒப்பந்தத்தில் முதல்வர், பிரதமர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு அந்த சமூகத்திடம்  வழங்குதல் வேண்டும். . .! நேர்மையாக சொல்கிறேன் முதல்வர் (திரு.ஜெயலலிதா ) போன்ற சிறந்த நிர்வாகிக்கு இயற்கை சார் மின் மேம்பாடு திட்டத்தை செளுமைபடுத்தி செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு 5 வருடமே அதிகம் தான். . .!

இத்தகை நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து அதிகார பலத்தை ப்ரோயோகித்து அந்த மக்களின் வைற்று எரிச்ச்சலை பெரும் பட்சத்தில். . .முதல்வரை  நல்லோர் சமூகம் திரு.செல்வி ஜெயலலிதா என்று அழைக்கும் மாண்பை விடுத்து "பொம்பள அழகிரி" என்று அருவருப்போடு அழைப்பார்கள் என்பது நிச்சயம் . . .!

 


 




பின்குரிப்பாக சில கோரிக்கைகளை சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். . .
நாராயண சாமி, சுப்பிரமணிய சாமி, சோ. இராமசாமி குருமூர்த்தி, தினமலர் அதிபர், தினமலர் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் ப.சிதம்பரம் யாவரும் இந்த 20 வருடத்திற்கு தங்கள் மனைவி, பிள்ளை குட்டி மற்றும் பேரன் பேத்திகளோடு "பாதுகாப்பான" அணு உலைக்கு அருகாமையில் வாழ்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் இந்த பகுதி மக்களுக்கு அணு உலையின் பாதுகாப்பின் மேல் நம்பிக்கை வருவதோடு அவர்கள் யாவரும் உண்மையை நிரூபித்து காட்டும் சத்திய சீலர்கள் என்று சில அறிவிலிகளுக்கு(நான் உள்பட) புரியம் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன். . .!
- கண்ணப்பன்
(படங்கள் : google.com)