Tuesday 24 July 2012

நாளைய ஒளிர்வு. . .

பாதைகள் எங்கும்
மின்னூட்டங்கள் வியாபித்திருந்தது
கிரகித்துகொண்டேன்.

நாளைய எந்தன் ஒளிர்வின் 
பிரம்மாண்டத்தை 
இன்றே  உணர்ந்து

வளரவிடாமல் வெட்டப்பட்ட 
தாவர வேலிகள்,
அதன் பின்னுள்ள அலங்கார மலர்கள்,

ஆலவட்டதின் அயர்வில்
அசையாது நிற்கும் வீதி மரங்கள்,

பசுமையான புல்வெளியுடன் தொடங்கும்
காடுகள்,

அந்திமயங்கிய வானவிதானத்தின்
அழகுச் சூரியன்,

செடிகளுக்கு தண்ணீர் விடும் 
மூதாட்டியின் என்மீதான 
அனுதாபப் பார்வை,

அறிமுகம் இல்லாத 
வெள்ளைகார பெரியவரின் 
சிரிப்பு,

பி.சுசீலாவின் "அமுதை பொழியும் நிலவே"
பாடல்,

வாழ்த்துகள் சொல்ல


பெருமிதத்தில்
நண்பர்கள் நிறைந்த வீடு திரும்பி 
சோ(அ)கமாய் அமார்கிறேன். . . !