Tuesday 30 November 2010

இன்னும் எத்தனை இரவுகள். . ?

இன்னும் எத்தனை இரவுகள். . ?
என் விழிகளில்,
விழக்குகள் எரிந்து கொண்டிருக்கும். . .
மின்சாரத்தை மிச்ச படுத்த விரும்புகிறேன். . .
அது,
என் தேசத்திற்கும்,தேகத்திற்கும்,
தற்போதைய தேவை. . .

Friday 12 November 2010

நீ எங்கு இருக்கிறாய் ?




காற்றும் என்னைச் சாடுகிறது,

காலம் என்னை தூற்றுகிறது

ஏன் எங்களை இழுத்தடிக்கிறாய் என்று. . .

இயற்கையே. . ! இப்படி பழிக்கிறது

இதில்,

நண்பர்களிடத்தில் நான் எப்படி குறை காண்பது. . ?

காரணம். . ? சொல்லபடுகிறது

காலத்தில் எனக்கு

காதல் வரவில்லையாம். . .

நகைக்கிறேன்,

மீண்டும் நகைக்கிறேன். . .

தனிமையின் தாராளம்

என்னைச் சூழும் தருணங்களில்

காற்றும் என்னைச் சாடுகிறது,

காலம் என்னை தூற்றுகிறது. . .


நீ எங்கு இருக்கிறாய் ?

மழையின் சாரல்,

தென்றலின் தழுவல்,

இலைகளின் நிறம்

இவைகள், நீ இன்றி

உணர்வு தர மறுக்கின்றன. . .



உன் கண்களை மறைக்கும்,

முகப்பு கூந்தலை தளர்த்தி

முத்தம் கொடுக்க,

என் உதடுகள் தவம் கிடக்கிறது. . .

உன் கைபிடித்து

நான் நடக்கும் தருனங்களுக்காக

என் கற்பனை பூங்காக்களில், மரங்கள்

மகரந்த பூக்களை உதிர்க்காமல் காத்திருக்கிறது. . .

நீ எங்கு இருக்கிறாய் ?

தெரியாது

நீ எப்படி இருப்பாய் ?

சத்தியமாக தெரியாது. . .

ஆனால் !

உன்னை நம்புகிறேன். . .

நீ எனக்கான இறைவனின் கருணை. . .

காற்றை பாடவை,

காலத்தை போற்றவை. . .

- கண்ணப்பன்

Saturday 6 November 2010

விருப்பத்திற்கு உவமை முகில் என்று. . .


கருக்கும் முகிலிடம்

கடன் கேட்டேன்,

வெறுக்கும் மனதினை. . .

அன்பு கொண்ட முகில்

அழுதது. . .

Monday 1 November 2010

குஸ்த்தி. . .


குழந்தையின் தோழமைத் தனம்,
கொண்டாட்டம். . .
தோழமையில் குழந்தைத் தனம்,
திண்டாட்டம். . !