Monday 10 September 2012

பேரழிவுக்கான வித்து




கூடங்குளம் அணு உலை மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தின் அமைப்பில் உருவாக்க பட்டது, மிகவும் பாதுகாப்பானது, ஆயிரம் மெகவாட் மின்சாரம் உருவாக போகிறது, நாடு இதன் மூலம் மகோன்மத நிலையை அடையபோகிறது இப்படி பட்ட அதிசய நிகழ்வை 17,000 கோடி செலவில் உருவாக்க பட்ட அக்க்ஷய பாத்திரத்தை வீனடிக்கலாமா. . .? என்று காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சியை சேர்ந்தவர்கள், தினமலர் உள்ளிட்ட சில பத்திரிகைகள், அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகள் வரிந்து கொண்டு அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது இந்த அரசை மூர்க்கமாக தாக்குவதற்கு மறைமுகமாக INFLUENCE செய்து கொண்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க என்ன நடந்தால் என்ன, எவன் வீட்டில் எளவு விழுந்தால் எனகென்ன, அணு உலை ஆரம்பித்து மின்சாரம் பெற்று அதன் மூலம் என் அடியில் வேகும் வேக்காட்டை ஆசுவாசப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று புதியதலைமுறை செய்திக்கு கருத்துகணிப்பு வாக்களித்து கொண்டு இருகின்றனர் நம் தமிழ்ச்சமுகத்தின் பெரும் பகுதியினர். 
இவர்களை எல்லாம் அரசாலுகிற “மாண்பு மிகு புரட்ச்சித் தலைவி அம்மா” (பழக்க தோஷம், விடுங்கப்பா!) மக்களுக்கு கொஞ்சம் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் தன்னோட மூர்க்க மற்றும் ஆணவ குணத்தாலும்,கேடுகெட்ட அட்வைஸ் குடுக்கும் அப்பறசெண்டிகளின் பேச்சை கேட்டும், எப்போது ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறைக்கு அதீத அதிகாரத்தை கொடுத்து, அவர்களும் ஐயா ஆட்சியில் வட்ட செயலாளர் வண்டுமுருகனின் பிஎ களிடம் கூட  கெட்டவார்த்தையால் திட்டு வாங்கிய கடுப்பில் அறவழியில் போராடுகிற மக்கள் மீது தடியடி நடத்தி தங்களது வீரத்தையும் பராக்குரமத்தையும் மீள்கொனர்ந்து பாலாக்கி கொள்கிறார்...!
அப்போ நம் போன்ற வளரும் நாடு வளர்வதற்கு என்ன தான் வழி ? அணு தானே மலிவாய் கிடைக்கிறது, உண்மையா இல்லையா என்றால், உண்மைதான். அனல் உலையை காட்டிலும் மலிவானதுதான் ஆனால் அதேசமயம் சிறு தவறு நேர்ந்தாலும் ஏற்படும் விபத்தின் விளைவு அதிகொடூரமானது. ‘தவறு எல்லாம் நேராது என்று விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் சொல்லிவிட்டார்களே’ என்று வீராவேசத்துடன் தமிழக மக்களின் நலம் காக்கும் காங்கிரசின் வாழும் வேலுநாச்சியார் என்ற நினைப்பில் விஜய தாரணி கேட்கிறாரே. . .? இதற்க்கு பதில் கூறுவதற்கு முன்பு வள்ளுவர் சொல்லியபடி இடுக்கண் வரும்கால் நகுகிறேன்.       
 
அதிகாரிகள். . . .???? எளவு வியாபாரம் செய்பவர்கள் (சிலர் விதி விளக்கு). கட்டுபடுத்தகூடிய இரசாயன வெடிமருந்துகளின் மூலம் விளையும் விபத்தை கூட கட்டுபடுத்த திராணி இல்லாமல் ஆண்டுகொருமுறை பட்டாசு தொழிலாளர்கள் செய்த வெடி வெடிக்கிறதோ இல்லையோ விபத்து வெடித்து எண்ணற்ற உயிர்கள் போனபின் விபத்து தடுப்பு குழு அமைத்து தங்களை குளிர்வித்து கொண்டு இப்போது மீண்டும் 56 பேரை காவு வாங்கிய பின்பும் மீண்டும் ஆய்வு குழு அமைத்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறிது பிசகினாலும் ஏற்படும் விபத்தின் தாக்கம் மிக கொடூரமாக உயிர் மூலக்கூரில் சந்ததி தோறும் நிலத்து நின்று ஊனத்தை விளைவிக்க கூடிய ஆபத்தை நம் சுகத்திற்காக அந்த பகுதி மக்கள் தலையில் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்.

 இந்த அரசுகள் அந்த மக்களுக்கு அதைமட்டுமா சொல்லுகிறது. அவர்களுக்கு பயப்படுவதற்கு உரிமை கொடுத்தது யார் என்று அடிக்கிறார்கள். அணு உலையில் இருந்து வெளியேறும் நீரின் வெப்ப நிலை 47°C, அப்படி வெளியேறும் நீரின் தன்மையினால் நிச்சயமாக சுற்றுவட்டார கடல் பகுதியின் மீன்வளம் பாதிக்கும். மீன் பிடி தொழிலை ஆதாரமாக நம்பி வாழும் மீனவர்கள் கடலுக்குள் வெகுதூரம் சென்றால் இல்லாத எல்லையை தாண்டி விட்டதாக கடந்த சில ஆண்டுகளில் சிங்களவன் கொன்ற மீனவர்கள் எண்ணிக்கை 550 ஐ தாண்டும், அடிபட்டு பொருள் இழந்தவர்கள் கணக்கில் அடங்காதவர்கள். கேரள அரசாங்கம் தங்கள் மாநில கடல் பகுதியில் மீன்பிடிக்க வருபவர்களிடம் வரி போடலாமா என்று திட்டம் தீட்டி கொண்டிருக்கையில் அந்த மக்கள் என்னதான் செய்வார்கள் ? எந்நேரமும் சாவையும் ஸ்திரத்தன்மை இல்லாத வாழ்வையும் எதிர்நோக்கி இருக்கும் மக்கள் போராடத்தான் செய்வார்கள்.
அவர்கள் அனுமதி இல்லாமல் அங்கு அணுஉலை நடத்தினால் அது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல். அக்கறை அற்ற மற்றும் ஊழல் நிறைந்த அதிகாரிகளை கொண்டு தொடர்ந்து விபத்து வரலாறை சந்தித்து வரும் தமிழ்நாட்டில், அணு உலையை நிர்மாணித்த ரஷ்யா கம்பனி விபத்து ஏற்பட்டால் இழப்பீடு ஏதும் தர சம்மதிக்காத (மறைமுகமாக விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதை உறுதி செய்யும் விதம்) நிலையில் தமிழ் நாட்டில் அணு உலை என்பது பேரழிவுக்கான வித்து என்பதை தவிர வேறு எந்த உண்மையும் இருக்க முடியாது.
(படங்கள்: www.google.com)