Monday 28 June 2010

கார்த்தி'கை'யில் தீபம். . .



கார்த்திகைக்கும் தீபத்திற்கும்,
காலம் தொட்ட,
கலாச்சார உறவு உண்டு
அந்த உறவின் தன்மை
ஒளிமயமானது. . .
பார்ப்பவர்களை லயிக்கச் செய்கிறது. . .
-------------
தீபம்,
எத்தனை மாதங்கள் ஒளிர்ந்தாலும்,
உன்னதம் என்னவோ கார்த்திகையில் தானே. . .

தீபம் இல்லாத கார்த்திகை ....?
"பத்தோடு ரெண்டு. . .
பன்னெண்டு" ஆகியிருக்கும். . .
-------------
தீபம் கண்களை கவர்கிறது,
கார்த்திகை இதையத்தை ஈர்க்கிறது. . .
பார்வையும், எண்ணமும். . .
நேர்கோட்டில் இணையும் தருணத்தில்,
அற்புதமான பயணம் தொடங்குகிறது. . .

அந்த பயணம்
மான்களும் மலர்களும் சூழ்ந்த,
பசுமைப் பள்ளத்தாக்கில் தொடர்கிறது. . .
ஆஹா. . ! என்ன ரம்யமான காட்சி !

கற்பனை ஓவியமயமானது. . .
அதற்குத் தெரியவில்லை,
"பாவம்-கார்த்திகை, அதற்க்கு 29 நாட்கள் தான்"
என்று. . .

இவ்வாறு எதிர்படும் எண்ணங்களை
எழுத்தாக்க,
வார்த்தைகளைத் தேடி
வானம் பார்த்திருந்த வேளையில்,
இப்படி ஒரு வாசகம் சிக்கியது. . .

"டேய் கண்ணப்பா ! பொழப்ப பாருடா". . .

Sunday 20 June 2010

Sun not getting down. . .


The evenings are not rose to someone. . .

But the time is 9:00 PM. . ?

May be they are in Amazing world. . !

I would like to see soon. . .

I would like to scale soon. . .

THE AMAZING,

Through my sharp "kids".

Tuesday 15 June 2010

சதீஷ். . .


சமுதாயச் சுழலின் ஆதிக்கத்திற்காக,
தன் "குழந்தைத்" தன்மைகளை
மாற்ற முயற்ச்சிக்கும், மானுடம்.
முயற்ச்சிகளின் முடிவில் தோல்வியுற்று,
எங்களை வென்றுவிட்டான் - நட்பினில். . .

கதையில் பார்த்த கர்ணனை,
காருண்யாவில் காட்டியவன். . .
நடப்பு வட்டத்திற்கு,
டீயும், புகையும் தருவதற்காக
அண்ணாச்சி கடை,
இவனை குத்தகைக்கு ஏற்றிருந்தது. . .(அது ஒரு வசந்த காலம்)
. . .
இவன்,
தட்வெட்ப மாறுதலுக்காக, மாறும்
மரங்கள் சூழ்ந்த வனத்தில். . .
தரம் மாறாத ஸ்தல விருட்சகத்தின் *பிரதான பாகம்*. . .

அன்புள்ள சதீஷ். . .
உயர்ந்து வாழ்வான்,
ஓவியமாய் பிறந்த ஒரு மகன்
என்ற,
உன் பெற்றோர்களின் கனவுகளுக்கு. . .
வண்ணம் தீட்ட , வாழ்த்துக்கள். . .
-கண்ணப்பன்
*{பிரதான பாகங்கள். . .ஒன்று மட்டும் அல்ல. . .}*

Friday 11 June 2010

ஆங்கிலத்தில் கவிதை. . .


ஆங்கிலத்தில் கவிதைகள். . .
அநேகம்பேர் ஆலாபனை செய்வார்கள்,
சிலாகிப்பார்கள். . .
அப்படி ஒன்றும் இதுவரை நேர்ந்தது இல்லை எனக்கு. . .
காரணம்,
ஆங்கிலத்தில் சிந்திக்க இதுவரை கற்றுக் கொள்ளவில்லை. . .

சமீபத்தில் என் நண்பன் அனுப்பிய குறுஞ்செய்தி,
ஆங்கிலம்! ஆனால் என்னை எதோ நெகிழச் செய்தது,
அவன் கடந்தகால நிகழ்வுகள். . .காரணமாக இருக்கலாம். . .
அது கவிதையா என்றுகூட தெரியவில்லை. . .
நான் அதை கவிதையாக உணர்ந்தேன். . .

Was a day wen i got my degree
after so many puzzles,
wen i got my offer letter
after too many trials,
a reebok shoe? 1st day office?
can it b her comin back?
happiness???
but wat happend today is makin me mad...sleepless...
where r d words??
Damn bike'Its jus crazy.
Incomparable!!
i feel "MY OWN MINE" :-)
-felix

Wednesday 2 June 2010

ரெமி. . .


ரெமி. . .
அடம்பிடிக்கும் மழலை. . .
கண்கள் குளிர்ந்துபோக சிரிப்பாள்,
காதுகள் நெகிழ்ந்துபோக பேசுவாள்,
அவள் விளையாட்டு பாவனைகள். . .அடடா!
எந்த ஒரு இறுக்கமான சூழலையும்
இளவங்கள் காற்றோடு கலக்கும் காட்சியாக்கும்
அதுவே அவளின் தனித்துவ மாட்சியாகும். . .
கர்வம்,
அவள் கால் நெகங்களின் நிழலை கூட நெருங்காது. . .
கள்ளம். . .என்பதே காணாத உள்ளம். . .

19-05-10 அன்று ரெமிக்கு திருமணம். . .

என்னால் யூகிக்க முடியவில்லை,
விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைக்கு
விவாகமா ?
பாலர் திருமணத் தடைச் சட்டம் . . .அமலில் தானே இருக்கிறது ?
கேள்விகளின் வேகத்தால் அன்று
மெரினாவின் அலைகள் கொஞ்சம் upset. . .
ஒன்றும் புரியவில்லை. . .
mansion-க்கு சென்று தூங்கிவிட்டேன் . . .
ஆம், எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றால் உடனே தூங்கிவிடுவேன் . . .
என் collage CGPA-க்கள் அதற்க்கு சாச்ட்சி. . .

23-05-10 அன்று Reception. . .

22-05-10 இரவு. . .
கோயம்பேடு பேருந்து நிலையமா ?
வடநாட்டு கும்பமேளாவா ?
அப்படி ஒரு கூட்டம். . .

"திருச்சிக்கு போகணும் Ticket வேணும்"
இப்படி ஒரு இடைத்தரகரிடம் கேட்டேன். . .
அவன் ஒரு திசையில் கையை நீட்டினான். . .
"வரிசை நிற்கிறது"
நானும் நின்று விட்டேன். . .
முன் நின்ற முதியவரிடம் விசாரித்தேன்,
"தனியார் வண்டியில் தரையில் அமர்ந்து போவதற்கு 500 ரூபாய், ஆறு பேர். . .அவருக்கு முன்னால் அதற்கும் நிற்கிறார்கள் "
மணி இரவு 11. . .
இறைவன் புண்ணியமோ, இடைத்தரகர் புண்ணியமோ. . !
உக்காருவதர்க்கு ஒரு Ticket வாங்கிவிட்டேன். . .
இந்த நிகழ்வுகள் என்னை ஒன்றும் செய்யவில்லை,
காரணம். . .ரெமிக்கு எப்படித் திருமணம் செய்தார்கள். . .?
என்ற வினாவும், அதற்க்கு விடை காணும் ஆவலும். . .

23-05-10 மாலை 7:00 மணி. . .

திருச்சி சௌபாக்யா மஹால்,
பரம சௌபாக்யவதியாக நிற்கிறாள் என் தோழி. . .
என்னை பார்த்தவுடன்,
தன் இரு புருவங்களையும் உயர்த்தி ,
சின்னச் சிரிப்புடன் வரவேற்கிறாள். . .
திகைத்து நிற்கிறேன். . !

அதைத் தவிர என்ன செய்ய முடியும் ?




பட்டும் , மாலையும்
அவளால் அன்று மேன்மை கொண்டது. . .
கிறிஸ்த்துவ பெற்றோர்களுக்கு மகளாகிவிட்டால்,
இல்லாவிட்டால். . .
பொட்டும் அன்று மேன்மை கொண்டிருக்கும்.

அதே ரெமி பாலாதான்,
அனால் திருமணப் பெண்ணாக. . .
திகைப்பூட்டும் விதத்தில் காட்சியளிக்கிறாள். . .
காலத்தின் கலைவண்ணத்தை போற்றுகின்றேன்.
காற்றின் அலைகளில் காதுக்கு எட்டியது. . .ஒரு குரல். ..
அது இப்படிச் சொன்னது. . .
"அவளுக்கு ஒரு வயது அதிகமாம் . . !
திருமணத்திற்கு தேவையானதை விட. . .(22)
மெல்ல புன்னகைக்கிறேன். . .
என் தவறை நினைத்து,
ஆம், அவளை குழந்தையாகவே பாவித்த என்னுடைய
தவறை நினைத்து. . .
சில நேரங்களில் தவறும், இன்பம் தருகிறது. . .

எத்தனையோ பெரியவர்கள் வாழ்த்துகிற இடத்தில்,
நானும் வாழ்த்த வேண்டும். . .

வாழ்த்துவதற்கு வயது இல்லை ,
எனக்கு அது தேவையும் இல்லை. . .
மனம் தான் வேண்டும் ! என்று என் மனம் சொன்னது.

. . .மனம் நிறைந்து வாழ்த்தினேன். . .
"வாழ்க வழமுடன் "

நண்பர் Victor-க்கு நன்றிகள். . .
வசந்தத்தின் வண்ணங்களை
என் தோழியின் முகத்தில் வியாபிக்க செய்ததற்கு. . .

கண்ணப்பன்