Saturday 7 May 2011

நியான் ஒரிக்களும் மறக்கில்லா. . .!

நிலவின் நெற்றியில்,

உதய சூரியன். . .

இவள் புருவத்தின் மத்தியில்

பொலிவு தரும் பொட்டு. . .

பொன்னிறம் நிறம் பூண்ட

வெள்ளரிப் பிஞ்சாய். . .

விசன சுவாசம் தாங்கும்

இவளின் மூக்கு. . .

பேதை பேசுவதையும்,

கொஞ்சலாய் கோர்க்கும். . .

குழித்த கன்னத்தோடு குலைந்த உதடுகள். . .

இடப்புறக் கால் முன்னெடுக்க,

வலப்புற உடல் பின்னிழுக்க. . .!

அவள் வடிக்கும் நடை அழகுக்கு,

வார்த்தைகளை எங்கே தேடுவேன். . .?

நல்ல வேலை ராஜாங்கம் என்னிடம் இல்லை,

எழுதி வைத்திருப்பேன். . .

மை தடவிய,

இவள் கண்களின் மந்திர மொழிகளுக்கு. . . !

ச்செரக்கில் தம்பிராட்டியின் சௌந்தர்யத்தை

நியான் ஒரிக்களும் மறக்கில்லா. . .