Monday 16 September 2013

மதுரையில் அணுக்கழிவு ஆய்வு மையம். . .!!??



மதுரை வடபழஞ்சியில் அணுக்கழிவு ஆய்வு மையம் அமைக்க பாபா அணு சக்தி ஆராய்ச்சி கழகம் மூலம் டெண்டர் விடப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்தியாவின் தவறான அணுசக்தி அனுகு முறையை தீவிராமாக ஆராய்ந்து வரும் வல்லுனர்கள் மத்தியில் இந்த நிகழ்வு 2 சாத்தியங்களுக்காக இருக்கலாம் என்று முன் மொழியப்படுகிறது அவை

1. அணு உலை உள்ள நாடுகள் தங்கள் அணுக்கழிவுகளை Deep Geological Repository என்று சொல்லப்படுகிற பூமிக்கடியில் வெகு ஆழத்தில் புதைக்கும் மையங்களை கொண்டு இருத்தல் வேண்டும், இதுவரை இந்தியாவிடம் இப்படி ஒரு மையம் இல்லை என்பது கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் வெளிகொனரபட்டது அதன் பிறகு கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதியில் அமைக்கலாம் என்ற முதற்கட்ட ஆய்வின் போதே அந்த பகுதியின் அனைத்து மக்களும், அனைத்து கட்சிகளும் (காங்கிரெஸ் மற்றும் பா.ஜ.க உட்பட) ஒருமித்த குரலுடன் எதிர்த்து செய்யப்பட்ட பெறும் போராட்டங்களினால் அந்த திட்டம் கைவிடபட்டது. . .அந்த கைவிடப்பட்ட திட்டமே மதுரை வடபழஞ்சியில் அணுக்கழிவு ஆய்வு மையம் என்ற பெயரில் அமைக்கபடுவதாக இருக்கலாம்.

2. கதிர் வீச்சின் அளவை அறியக்கூடிய டிடெக்டர் லேபரட்டரிக்காவும் இந்த டெண்டர் விடப்பட்டு உள்ளது எனபடுகிறது. இது நிச்சயமா கூடங்குளத்தில் விபத்து நிகழ்ந்தால் அல்லது இயல்பாகவோ அங்கு இருந்து கதிர்வீச்சு மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பரவும் சாத்தியங்களை உறுதி செய்கிறது.

நமது வாழ்வாதாரங்களின் பாதுகாப்பை நாம் தான் சிந்திக்க வேண்டும் எந்த ஒரு காலத்திலும் ஆட்சியாளர்களோ அல்லது ஆணவமும் லாப நோக்கமும் கொண்ட அரசியல்வாதிகள் சிந்திக்க. . .!!?? ஏன் கருத கூட மாட்டார்கள்.