Sunday 23 June 2013

ஜூன் 24 கவியரசரின் பிறந்தநாள்


எட்டு வார்த்தை கொண்ட வாழ்த்துக்கு
எதுகைக்கும் மோனைக்கும்
இரவெல்லாம் ஏங்கி
விழி இரண்டும் விழித்தும் சிவந்தும்
வெற்று காகிதத்தை வெறித்து பார்க்கையில். . .
சற்றும் யூகிக்க முடியாத,
விண்ணுக்கும் மண்ணுக்கும் விரித்தாலும் கொள்ளாத
காதலாய் காமமாய்
இறையாய் தத்துவமாய்
பெறும் இன்பமாய் இருந்தது இவன் தமிழ். . .

மதுவில் திழைத்து வந்த வரிகள்
என்று
குடித்து விட்டு வாந்தி எடுக்கும்
தற்குறிகள் தர்க்கத்தை எண்ணுகிறேன். .
பாவத்தின் மது
செய்த புண்ணியம்
கவிஞனின் உடலில் இருந்தது.,
கவிதைகள்
அவனுள் இருந்தது. . .!!!!
அது
தீரா திழைப்பு. . .
பரிணமித்த
பாரதியின் பாதச்சுவடு. . .!

இக பரம் இரண்டுக்கும்
இறைவன் முருகன்
இதை எடுத்தாண்டதால் தானோ
இவன் இந்தமிழும்
எனக்கு முருகு. . .!!!

கண்ணதாசன்

அவனின் தாசன்