Wednesday 8 October 2008
காதலிக்க வேண்டும் . . .
காதலிக்க வேண்டும் . . .
காமத்தின் சாரத்திற்காக அல்ல,
கவிதையின் ஈரத்திற்காக. . .
காதலிக்க வேண்டும். . .
கன்னித் தமிழில்,
கவிதைகளை பின்னி எடுக்கும்
வித்தையின் வித்திற்காக . .
அதில் விளைந்திடும் முத்திற்காக. . .
காதலிக்க வேண்டும். . .
மாற்றத்தின் மாட்சிமைக்கு,
அடங்காமல்,
மகிழ்ந்தாடும் கவிதைகளுக்கு,
கர்த்தா. . .
இந்த காதல் தானே,
அதன் ஆளுமைக்காக. . .
காதலிக்க வேண்டும். . .
வளம் பெற்ற காதலில் தானே,
கவிதைகள் பலம் பெறுகின்றன. . .
என் கவிதைகளின் எழுச்சிக்காக . . .
காதலிக்க வேண்டும் . . .
காதலிக்க வேண்டும். . .
Friday 26 September 2008
இறப்பதற்காக. . .
(நண்பனின் "பந்தம்" என்ற கவிதை கண்டு. . . என் உதற்றல்கள்)
அலங்கார தேவியே,
வணிதாவனி. . .
அன்பனை கவிபாட,
அருள்வாய் இனி. . .
. . .
உள்ளத்தின் உதிரத்தை ஒன்றாக்கி,
உயிர் தந்தாய். . .
உயிருக்கு
"பந்தம்"என்றொரு பெயரும் தந்தாய். . .
எழுதிய ஒரு கவிதையில்,
என்னைச் சாகடித்தாய். . .
எத்தனை முறை சாவேன் ?
எத்தனை முறையும் சாவேன். . .
ஏழு சென்மமும் சாவேன் . . .
பிறப்பதையே தொழிலாக்கிவிட்டேன்,
உன் கவி படித்து,
இறப்பதற்காக. . .
தேவதைகளே !
தேடலை நிருத்துங்கள். . .
உங்கள் அமரத்தன்மையின்,
அமிர்தம். . .
என் நண்பனின்
காலடியில். . .
-கண்ணப்பன்செந்தில்
Thursday 11 September 2008
திழைத்தேன். . .
அன்று ஒரு இரவு,
மீண்டது . . .
நண்பனின் உறவு.
முரண்பட்டது. . .என் மீது,
திறன் கொண்டவனின்,
முரண்பாடுகள். . .
விண்ணோடு விளையாட
விளைந்த,
காகிதக் குவியல்கள். . .
கண்ணிமைக்கும் பொழுதில்,
கடுகுத் தீயில்,
காற்றாய்,
கரியாய்,
கருத்திழந்த கதை போல. . .
நண்பனிடம். . .
இல்லை...இல்லை...
நட்பிடம்,
நான் கொண்ட. . .சினமெல்லாம்,
சின்னா பின்னமாய்,
சிதறிப்போனது. . .
வேசம் கொண்ட வெறுப்பெல்லாம்,
நாசமாய் போனது,
நேசமாய் ஆனது. . .
திழைத்தேன் என்னில். . .
பிழைத்தேன் மண்ணில். . .
ஏகாந்தம் கொண்டாடும்,
"ஏகனே ". . .
ஒன்றில் உண்டு. . .
ஆயரம் கோடியில் ,
அடங்காத தசமங்கள். . .
என்னில் நீ. .யும் அப்படித்தானடா. . .
எப்படிச் சொல்வேன். . .இதை,
என்னைப் பெற்றெடுத்த,
முத்தமிழில் ? ? ?
"உறக்கத்தில் "
உளறினாலும், உண்மையைச் சொல்வேன். . .
"தள்ளாத" நிலையுலும் ,
தளராத வார்த்தை கொள்வேன். . .
காரணம்,
எழுத்து என்கிற மதத்தில். . .
கண்ணதாசனை,
கடவுளாக கொண்டவன் நான். . .
உணர்வுகளின் வெளிப்பாடே,
எங்கள் மதத்தின்,
உயிரோட்டம். . .
வேண்டுவதை தந்திடும்,
வேதத்தின் நாயகா. . .
வேண்டுவது உன்னிடம்,
"வேண்டாம் "
வேண்டாம். . .இனி,
இந்தச் சந்திர சாகசம்,
எங்கள் நட்பில். . .
இனி. . .என்றும்,
எட்டுத்திக்கும் விட்டெரிக்கும்,
இளஞ் சூரியனாய்,
சுடரட்டும். . .
பரிதிஇன் நிழலில். . .
-கண்ணப்பன்செந்தில்
Wednesday 10 September 2008
ஆரிடம் அழுவேன். . .
ஏன் தங்கத்திற்கு அதிகம் விலை?
Subscribe to:
Posts (Atom)