Saturday 27 July 2013

வாலி நீ என்றும் வாழி !!!!






இனி யாரிடம் கேட்போம்
எடுத்த மொழி
அடுக்கி வரும்
மிடுக்கின் தமிழை. . .?

இனி யாரிடம் பருகுவோம்
தொடையும் சந்தமும்
எதுகையும் மோனையும்
துளிர்த்து வரும்
இன் தமிழ் அதகத்தை. . .?


இனி யாரிடம் பார்ப்போம்
செம்மாந்த நடை 
பொறையாரந்த நிலை
இறையார்ந்த சொல்
அருவி வரும்
என் தமிழ் அருவியை. . .? 

முருகா
இவரின் உயிர்
உன் இணையடி தாமரையில்
இளைப்பாற இறைஞ்சுவதர்க்கு
என் நலம் தடுக்கிறது. . .
இவரை மீள்வித்து
மீண்டும் பிறக்கச்செய்
நின் தமிழை
நிகரில்லாமல் நிகர்க்கச் செய்

வாலி நீ என்றும் வாழி!!!!!

Sunday 14 July 2013

இரசவாத உண்மை

சோழிகள் உருளும்
ஜதி
மின்னல் பூக்கும் ஒளி
சிரிக்கவில்லை 
சிறுகச் சிறுக
சிதைக்கிறாள் என்னை. . . 

இரசவாத உண்மை
 
உன் 
மாதுள மணி நிற உதடுகளுக்கு 
பின் 
ஒளி(ர்)ந்து விளையாடுகிறது. . . 

திமிர் பிடித்தவள் என்கிறாள் 
உன் தோழி 
யாருக்கு தான் இவளை பிடிக்காது?!
பாவம் "திமிர்" 
என்கிறேன் வெகுளியாக. . .