Thursday 3 November 2011

மதிப்புக்குரிய முதல்வர் அம்மா அவர்களுக்கு,

மதிப்புக்குரிய முதல்வர் அம்மா அவர்களுக்கு,
தாவுநீர்க் கடலைப் போல்
தண்ணருள் அலைகள் பொங்கும்
சந்திரப் பிரப்பூங் கண்ணி
சற்றுநீ திரும்பிப் பார்த்தால்
மேவிய வறுமை தீர்ப்போம்
மின்னிடும் விழிகள் காண
விழைந்தனோம் போற்றி ! போற்றி !
(-ஆதிசங்கரர், தமிழில் கண்ணதாசன் )
மாலவன் மார்பிலாடும் திருமகள் தாங்கள் எண்ணத்தின் நற்செயல்கள் யாவும் ஆக்கம் பெற தமிழகத்தை செல்வமயமாக்கி இன்னருள் புரிய பிராத்திக்கிறேன். . .

சென்னையில் உள்ள “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை", குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றத் தாங்கள் முடிவெடுத்து இருப்பதாகச் செய்தி அறிந்தேன்! இது நிச்சயம் நடந்துவிட கூடாது அம்மா!
நான் தற்போது லண்டன் நகரத்தில் வசித்து வருகிறேன்,இங்கு உள்ள நவீன நூலகங்களுக்கு எந்தவிதத்திலும் மாற்று இல்லாத சிறந்த கட்டமைப்பு மற்றும் வசதிகள் கொண்ட நூலகம் ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’.
முன்னர் நீங்கள் அதிநவீன தலைமைச் செயலகத்தை மக்களின் பயன்பாட்டுக்கு பன்முனை மருத்துவமனையாக பணித்த பொழுது தங்களின் தலைமையை எண்ணி மகிழ்ந்த அதே உள்ளம் இன்று அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் செய்தி அறிந்து துடிக்கிறது. மேலும் அந்த கட்டிடத்தின் உட்கட்டமைப்பு எந்த ஒரு வகையிலும் மருத்தவமனைக்கு ஒவ்வாது.
கடந்த ஆட்சியின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து என்னை போன்ற இளைஞர்கள் தங்களுக்கு ஆதரவு பரப்புரை நிலைப்பாட்டை எடுக்க துணிந்து அவ்வண்ணம் செய்தமைக்கு எங்களின் வாசிப்பு மற்றும் படித்தலின் மூலம் பெறப்பட்ட பகுத்தறியும் தன்மை தான். அந்த அறிவு இன்று நீங்கள் எடுத்த நிலைப்பாட்டை வேதனையும் ஏமாற்றமும் நிறைந்து பார்க்கிறது.
இந்த நூலகம் ஏற்கனவே பல ஆயிரம் மக்களுக்குச் சேவை செய்துவருகிறது மேலும் தங்களின் ஆட்சி திறமையை பெரிதும் வியந்து பாராட்டிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டு, அங்கே உரையாற்றுகிறபொழுது “ஆசியா கண்டத்திலேயே மிகச் சிறந்த நூலமாக இது அமைந்திருக்கிறது” என்று பாராட்டிச் சொன்னார் என்பதை இந்த தருணத்தில் நினைவு கூற விரும்புகிறேன். இத்தனை மேன்மைகள் நிறைந்த இந்த நூலகத்தை இடம் மாற்றாமல், புது இடத்தில் மருத்துவமனையைக் கட்டவேண்டும் என்று கோருகிறேன்!

தமிழக மக்கள், தங்கள் மேல் மிகுந்த மதிப்பும் அதீத நம்பிக்கையும் வைத்துள்ளார்கள் என்பது கடந்த உள்ளாட்சி மற்றும் இடைத் தேர்தல் மூலம் தாங்கள் அறிந்ததே!
சிறந்த படிப்பாளர் மற்றும் வாசிப்பாளரான நீங்கள், நூலகத்தையும் காப்பாற்றி, குழந்தைகள் நலத்தையும் பேணிப் புகழ் பெற வேண்டும் என்று இரைஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
                                               தங்கள் உண்மையுள்ள
                                                   கண்ணப்பன்
Kannappan Shanmuganathan
Block M1, 69F,Forty Lane,
Wembley Park,
London - HA9 9UJ.
+447771303532

Friday 17 June 2011

மாயை. . .


தலைதுவட்டும் உன்தன்

ஈரம் பூசிக்கொள்கிறேன். . .தனிமையில்.

கனம். . .


காதல் முகில்கள் திரளும்
காணொளி பார்த்ததும்,
என் தோழ்கள் கனமாகிறது. . .
தன் தனிமையில். . .!

Saturday 7 May 2011

நியான் ஒரிக்களும் மறக்கில்லா. . .!

நிலவின் நெற்றியில்,

உதய சூரியன். . .

இவள் புருவத்தின் மத்தியில்

பொலிவு தரும் பொட்டு. . .

பொன்னிறம் நிறம் பூண்ட

வெள்ளரிப் பிஞ்சாய். . .

விசன சுவாசம் தாங்கும்

இவளின் மூக்கு. . .

பேதை பேசுவதையும்,

கொஞ்சலாய் கோர்க்கும். . .

குழித்த கன்னத்தோடு குலைந்த உதடுகள். . .

இடப்புறக் கால் முன்னெடுக்க,

வலப்புற உடல் பின்னிழுக்க. . .!

அவள் வடிக்கும் நடை அழகுக்கு,

வார்த்தைகளை எங்கே தேடுவேன். . .?

நல்ல வேலை ராஜாங்கம் என்னிடம் இல்லை,

எழுதி வைத்திருப்பேன். . .

மை தடவிய,

இவள் கண்களின் மந்திர மொழிகளுக்கு. . . !

ச்செரக்கில் தம்பிராட்டியின் சௌந்தர்யத்தை

நியான் ஒரிக்களும் மறக்கில்லா. . .

Monday 28 March 2011

சிதறல். . .

கடும் குளிர். . .
கூவுகிறது காற்று,
தேகம் எங்கும்
அனலாய் ழுவுகிராய். . .

கண்ணுக்கு புரியாத
கதிர்வீச்சாய்
கலந்து நிற்கிறாய் என்னோடு. . .

காதலே ! நீ யார் என்று தெரியாமல்,
கவி பாடுகிறேன். . .
உன்னைச் சேராமலே,
பிரிந்து தவிக்கிறேன். . .
காட்சிகள் இல்லாத கணவாய். . .
உருவம் இல்லாத நிழலாய். . .
ஆசைகளாய்,
ஏக்கங்களாய்................ஐயோ ! வார்த்தைகளும்
உன்னால் வஞ்சகம் செய்கிறதடி. . .

அத்தனைக்கும்,
ஆறுமுகனை பிராத்திக்கும். . .
எந்தன் உள்ளம். . .
இன்று உனைக் காண,
"உனக்கான" உள்ளம்
உன்னிடம் பிராத்திக்கிறது . . .பாவியடி நீ !
நண்பன் முருகன் நல்லவன்,
நாளை தமிழ் சொன்னால். . .சரி ஆகிவிடுவான். . .


Friday 18 February 2011

ஏனோ. . .குவியமில்லா ஒரு காட்சிப் பேழை !


ஏனோ. . .குவியமில்லா ஒரு காட்சிப் பேழை !

உணர்வுகளை வெளிபடுத்தும் சூக்க்ஷும கவிதைகளை யார் எழுதினாலும் ஒரு வித ஈர்ப்பு இருக்கும். . .அவரிடம் தமிழ்ச் செழுமை மேலோங்கும் பொழுது, அது நம்மை மோன நிலைமைக்கு இட்டு செல்லும். . .அவர் மேலும் படித்தவராக (இயற்க்கை அறிவியல்) இருந்தால் அங்கு இருந்து வரும் வரிகள். . .நம்மை மோனத்தன்மையில் ஆனந்த பிரவாகத்துக்கு உட்படுத்துகிறது, லயிக்க செய்கிறது. . .இந்த பாடல். . .! அந்த ரகம்.

நியாபகம் இல்லை, உணர்வில் இருக்கிறது . . .தபு ஷங்கரின் கவிதை நூல் அது. . .இயற்கை அறிவியலை காதலோடு கலந்து மயங்க செய்து இருப்பார். . .வெகு நாட்கள் கழித்து மதன்கார்கியின் வரிகள். . .! வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். . .

Wednesday 26 January 2011




மீன்கள் காற்றில்,
நீந்துவதைக் கண்டேன்
மிளிரும் உந்தன் கண்களாய். . .

மாலைக் கதிரவனை
மண்ணில் கண்டேன்,
மங்கை உன் நிறமாய். . .

பொன்னிற மேனி,
பொலிவுறு பார்வை,
விண்ணையும் வீழ்த்தும். . . !
விளக்கம் இன்னும் சொல்லவோ
நான் வீழ்ந்ததன் காரணம் ?

Sunday 16 January 2011

கவிதை. . .

கவிதை,
நித்திரை இல்லாத கனவுகளின்
நிழல் வடிவம். . .