Friday 18 February 2011

ஏனோ. . .குவியமில்லா ஒரு காட்சிப் பேழை !


ஏனோ. . .குவியமில்லா ஒரு காட்சிப் பேழை !

உணர்வுகளை வெளிபடுத்தும் சூக்க்ஷும கவிதைகளை யார் எழுதினாலும் ஒரு வித ஈர்ப்பு இருக்கும். . .அவரிடம் தமிழ்ச் செழுமை மேலோங்கும் பொழுது, அது நம்மை மோன நிலைமைக்கு இட்டு செல்லும். . .அவர் மேலும் படித்தவராக (இயற்க்கை அறிவியல்) இருந்தால் அங்கு இருந்து வரும் வரிகள். . .நம்மை மோனத்தன்மையில் ஆனந்த பிரவாகத்துக்கு உட்படுத்துகிறது, லயிக்க செய்கிறது. . .இந்த பாடல். . .! அந்த ரகம்.

நியாபகம் இல்லை, உணர்வில் இருக்கிறது . . .தபு ஷங்கரின் கவிதை நூல் அது. . .இயற்கை அறிவியலை காதலோடு கலந்து மயங்க செய்து இருப்பார். . .வெகு நாட்கள் கழித்து மதன்கார்கியின் வரிகள். . .! வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். . .

1 comment:

srinath said...

tamizha padikum pothu oru vitha mayakam irrukathaan seiyuthu.