Saturday 24 March 2012

திருப்புறவார்பனங்காட்டூர் - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். . .


நீடல் கோடல் அலரவெண் முல்லை
நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே
-திருஞான சம்பந்தர்
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,

                                வணக்கம், இறைவனின் மாரில்லாத கருணையின் வெளிப்பாட்டால் தங்கள் ஆட்சியில் தமிழகம் வளமையும், அன்பும், ஆனந்தமும் பெருக வேண்டும் என்று எம்பெருமானின் திருவுலத்தை பிராத்திக்கிறேன்.
 மேற்ச்சொன்ன பாடல் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரால் “திருப்புறவார்பனங்காட்டூர் ஸ்ரீ புறவம்மை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீசர் பெருமான் திருவருள் நோக்கி பாடப்பெற்ற தேவாரப் பாடல், நாளும் தில்லையாலும் ஞானமா நடராச மூர்த்தியின் திருவருளை எண்ணி உள்ளம் உருகி விழி செருக வழிபடும் சிவனடியார் பெருமக்கள் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் யாவையும் திரு கைலைக்கு பொருந்தி வழிபடுவார் என்பதை ஆன்மீக ஞான மார்க்க வழிதேடும் நீங்கள் அறியாததொன்றுமில்லை, அப்படி இருக்க தங்கள் மேன்மை மிகுந்த ஆட்சியின் கீழ் உள்ள தமிழகத்தின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற பணயபுறம் (திருப்புறவார்பனங்காட்டூர்) திருப்பனங்காட்டீசர் பெருமான் திருக்கோவிலை நெடுஞ்சாலை அமைக்கும் பொருட்டு, இடித்து அகற்ற போவதான செய்திகேட்டு இதயம் ஒருங்கிய நிலை அடைந்துள்ளோம். அறிவின் மேன்மை பொருந்திய பொறியாளர் பெருமக்கள் தங்கள் அனுபவ மேன்மையால் வேறு ஒரு பாதை கொண்டு சாலை அமைக்க முடியும் ஆனால் எதிர்த்து செய்ய பனி ஒன்று அறிந்திடாத ஏழை நாங்கள், சூது தவிர்த்து சிவநெறி தலைத்து ஓங்கச் செய்த ஞானசம்பந்த மூர்த்தி ஸ்வாமிகள் பாடிய 1000 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஸ்தலத்தை எங்கனம் மீள்கொனர்வோம் ? நெடுஞ்சாலைக்கு மற்றுப் பாதை அமைக்க வழி வகை செய்து அடியார்கள் இதயம் ஆனந்தமுற நீங்கள் நல்லதோர் நடவடிக்கை மேற்கொண்டு அடியார்க்கு அடியானின் திருவருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்று மன்றாடி வேண்டிகொள்கிறோம்.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

என்றும் தங்கள் கீள்படிந்துள்ள
கண்ணப்பன் 





(படங்கள் : http://www.shaivam.org )





No comments: