Wednesday 21 March 2012

அணு(கு) முறை. . .!



ஆயிரம் தான் சொன்னாலும் தற்போதைய சூழ்நிலையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்தியா போன்ற வளரும் நாட்டில் அணு மின்சாரத்தின் தேவை நிச்சயம் தவிர்க்க இயலாதது. . .! அதே சமயம் அதில் உள்ள ஆபத்தும் மறுக்க முடியாதது, அதில் இருந்து வெளியேறும் கதிரியிக்கம் நிறைந்த நீரினால் மீன் வளம் குறையும் என்ற மீனவ மக்களின் வாதம் இயல்பானதும், அவர்களின் வாழ்வாதார சம்பத்தபட்டதும் கூட. . .!மீன் கிடைத்தால் தானே அவர்கள் அதை குளிர் பதனிடு(cold storage) அறையில் சேமிக்க இயலும் ?

 இப்படி உள்ள சூழ்நிலையில் கூடங்குளத்தில் சாலைகள் போடுவதை போன்ற "இனாம்" அரசியலை தவிர்த்து அதில் வெளியேறும் நீரின் தரத்தை மேம்படுத்தி வெளியேற்றுவதற்கு அனைத்துலக (மறுபடியும் இந்திய அணு விஞ்ஞானிகள் அல்ல...!) சூளியில் வல்லுனர்கள் மற்றும் அறிஞர்களை கொண்டு ஒரு புது நீர் மேம்பாட்டு சுத்திகரிப்பு நிலையத்தையோ அல்லது ஏற்கனவே உள்ளவற்றில் மாறுதல்கள் கொண்டோ வடிவமைக்கலாம். . .! அது மட்டும் அல்லாமல் 20 வருடங்களுக்குள் இந்த அணு மின்நிலையத்தை மூடுவதற்கான உறுதி மொழி  ஒப்பந்தத்தில் முதல்வர், பிரதமர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு அந்த சமூகத்திடம்  வழங்குதல் வேண்டும். . .! நேர்மையாக சொல்கிறேன் முதல்வர் (திரு.ஜெயலலிதா ) போன்ற சிறந்த நிர்வாகிக்கு இயற்கை சார் மின் மேம்பாடு திட்டத்தை செளுமைபடுத்தி செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு 5 வருடமே அதிகம் தான். . .!

இத்தகை நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து அதிகார பலத்தை ப்ரோயோகித்து அந்த மக்களின் வைற்று எரிச்ச்சலை பெரும் பட்சத்தில். . .முதல்வரை  நல்லோர் சமூகம் திரு.செல்வி ஜெயலலிதா என்று அழைக்கும் மாண்பை விடுத்து "பொம்பள அழகிரி" என்று அருவருப்போடு அழைப்பார்கள் என்பது நிச்சயம் . . .!

 


 




பின்குரிப்பாக சில கோரிக்கைகளை சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். . .
நாராயண சாமி, சுப்பிரமணிய சாமி, சோ. இராமசாமி குருமூர்த்தி, தினமலர் அதிபர், தினமலர் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் ப.சிதம்பரம் யாவரும் இந்த 20 வருடத்திற்கு தங்கள் மனைவி, பிள்ளை குட்டி மற்றும் பேரன் பேத்திகளோடு "பாதுகாப்பான" அணு உலைக்கு அருகாமையில் வாழ்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் இந்த பகுதி மக்களுக்கு அணு உலையின் பாதுகாப்பின் மேல் நம்பிக்கை வருவதோடு அவர்கள் யாவரும் உண்மையை நிரூபித்து காட்டும் சத்திய சீலர்கள் என்று சில அறிவிலிகளுக்கு(நான் உள்பட) புரியம் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன். . .!
- கண்ணப்பன்
(படங்கள் : google.com)

No comments: