Thursday 2 May 2013

காற்று. . .!!!


உரு இல்லாத காற்று
உன்
கருங்கூந்தல் உடனான சரசத்தில்
உயிர்க்கிறது என் காதல். . .

உயிர் காற்று
நெருப்பின் தேவை
எத்துனை உண்மை. . .!
உன்
உயரின் காற்றல்லவா
என்னில் தழல்கிறது. . .

மெல்லியது காற்று,
மிகை மெல்லியது
நுதல் வழி விழி தொடும்
உன்
முன் கூந்தல். . .

எதிர் வரும் காற்று
உன்
கேச ஸ்பரிசத்திர்காக. . .

சூழும் காற்றில்
சுழலும் நினைவில்
-கண்ணப்பன்

No comments: